ஆப்நகரம்

தினமும் செத்துப்பிழைக்கும் நோயாளிகள்; சடலம் அருகே சிகிச்சைன்னா அப்படிதான்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பலனின்றி இறந்த நோயாளிகளின் சடலங்கள் உடனுக்குடன் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பீதி அடைந்து வருகின்றனர்.

Samayam Tamil 24 May 2021, 12:40 pm
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற ஏராளமான நோயாளிகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை நோக்கி வந்தபடி உள்ளனர்.
Samayam Tamil காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை


அப்படி இருக்கையில் தற்போது இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 115 சாதாரண படுக்கைகள், 235 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 25 ஐசியு படுக்கைகள் உள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகள் எண்ணிக்கை கூடி வருவதால் படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன.

இதன் காரணமாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை பலனின்றியும், சிகிச்சை கிடைக்காமலும் கொரோனா நோயாளிகள் இறப்பது வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறு இறக்கும் நோயாளிகளின் சடலங்கள் உடனுக்குடன் அகற்றப்படாமல் வார்டுக்குள்ளாகவே பல மணிநேரம் கிடப்பதால் சிகிச்சை பெறும் நோயாளிகள் பீதி அடைந்து வருகின்றனர்.

ஓய்வில்லாமல் எரியும் உடல்கள்; மயான ஊழியர்கள் போராட்டம்!

இதையடுத்து நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்கின்றனர். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது இறக்கும் நோயாளிகளின் சடலங்களை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

அடுத்த செய்தி