ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை மையமா?; ‘வேண்டவே.... வேண்டாம்!’

காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில், கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தனியார் மருத்துவமனை முன் வந்துள்ளது. ஆனால் மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 17 May 2021, 2:38 pm
தமிழகத்தில் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


இதற்கிடையே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகள் அளிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பிரபல தனியார் மருத்துவமனை முன் வந்துள்ளது. இதற்கு தமிழக சுகாதாரத்துறையும் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையின் பின்புறம் உள்ள தெரு வழியாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அதற்கான கட்டமைப்பு வசதிகளை தனியார் மருத்துவமனை மேற்கொண்டது.

மருத்துவமனையின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் குழம்பி உள்ளது.

மின் மயானம் எப்பவும் பிசி; கொரோனாவ கொல்லுங்க!

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

இந்த பகுதியை சுற்றிலும் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. ஒருவேளை இங்கு கெரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் எங்கள் குடியிருப்புகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எங்கு பார்த்தாலும் அதிக அளவில் சிறுவர்கள் ஓடியாடி விளையாடுகின்றனர். அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை நிர்வாகமும், தமிழக அரசும் செயல்படக்கூடாது.

ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கூட்டம்; விசேஷம் இருந்தா கூட தானே செய்யும்!

அதுமட்டுமல்லாமல் குறைந்த பரப்பளவிலான இடத்தில் தான் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அதனால் ஆபத்து என்றால் நோயாளிகளை வெளியேற்றும் நடவடிக்கையோ அல்லது பொதுமக்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யவோ முடியாது.

கொரோனா சிகிச்சை மையம் தேவையான ஒன்றுதான். ஆனால் அது குடியிருப்புகளுக்கு அருகில் இருப்பது தான் ஆபத்தை விளைவிக்கும் ஒன்று. எனவே இனியாவது எங்கள் சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

அடுத்த செய்தி