ஆப்நகரம்

ரெம்டெசிவிர் வேணும்ன்னா வரிசை முக்கியம்; கொளுத்தும் வெயிலில் தவிக்கும் உறவினர்கள்!

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு போதிய அளவுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Samayam Tamil 4 May 2021, 4:33 pm
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 2 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைத்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
Samayam Tamil மருந்து வாங்க கால்கடுக்க காத்திருக்கும் உறவினர்கள்
மருந்து வாங்க கால்கடுக்க காத்திருக்கும் உறவினர்கள்


அதிகாலை முதல் கூட்டம் அலைமோதுவதால் பலரால் வாங்க முடியாமல் போகிறது. இதனால் சிலர் முன்தினம் இரவில் இருந்தே உயிரையும் பொருட்படுத்தாமல் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக சாலையோரம் காத்துக்கிடப்பதை காண முடிகிறது.

டோக்கன் உள்ளவர்களுக்கு மருந்து வழங்கப்பட்ட பிறகு வரிசையில் உள்ள முதல் 250 பேருக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த டோக்கன் முறையிலும் குளறுபடிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

நாளு நாள் கூட ஆகல அதுக்குள்ள தொடங்கிட்டீங்களா?; ஸ்டாலினை ஆத்திரமூட்டிய அம்மா உணவக விவகாரம்!

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

நாங்கள் பல்வேறு ஊர்களில் இருந்து நம்பிக்கையுடன் இங்கு வந்து மருந்துக்காக போராடி வருகிறோம். ஆனால் இங்கு உட்காருவதற்கு கூட இடம் இல்லை. இதனால் நாள் முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிற்கிறோம். இதனால் உடல் சோர்வடைந்து நாங்களும் ஏறக்குறைய நோயாளிகள் ஆகிறோம்.

எங்களை உள்ளே அமர வைக்க நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. இங்குள்ள மரத்தடி நிழலில் வரிசையாக நிற்காவது அரசு அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய உடனே முன்வர வேண்டும். மேலும் கழிவறை, குடிநீர் வசதிகளை உடனே தாமதம் இல்லாமல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி