ஆப்நகரம்

Adyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தாவின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jan 2021, 11:22 am
பிரபல புற்றுநோய் மருத்துவரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான சாந்தா (93), உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 19) காலை காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்பு படம்
மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்


அவரது மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும் அவரது சிகிச்சை முறைகள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும்.

மருத்துவர் சாந்தாவின் நற்பெயருக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும், அவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையிலும் அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என்று முதல்வர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி...தமிழக அரசு அதிரடி முடிவு!
பிரதமர் புகழாரம்:
முன்னதாக, மருத்துவர் சாந்தாவின் மறைவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "புற்றுநோய் சிகிச்சைக்காக ஆற்றியுள்ள ஆக சிறந்த பங்களிப்புக்காக சாந்தா அவர்கள் என்றென்றும் நாட்டு மக்களா்ல் நினைவுகூரப்படுவார். இவர் ஏற்படுத்திய சென்னை அடையாறு மருத்துவமனை ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் சிறந்தது விளங்குகிறது.

2018 இல் இந்த மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தருணம் தற்போது நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பிரதமர் மோட கூறியுள்ளார்.

ஞானதேசிகன் வீட்டிற்கு சென்ற முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவத் துறையில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்காக பத்மபூஷன், பத்மவிபூஷன்,மகசசே உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சாந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி