ஆப்நகரம்

அதுக்குனு இப்படியா? சிக்கலில் ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ!

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 3 Jul 2022, 1:38 pm
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையிலான ப்ளூ வழித்தடம், சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான க்ரீன் லைன் வழித்தடம் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அடுத்தகட்டமாக பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் என பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான முதல்கட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Samayam Tamil pmk ramadoss urges tamil nadu govt to start airport kilambakkam metro works this year
அதுக்குனு இப்படியா? சிக்கலில் ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ!


அதிர்ச்சியூட்டும் தகவல்

இதற்கிடையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான ப்ளூ லைன் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை 10 மாதங்களுக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒப்புக் கொண்ட ஸ்டாலின்

இந்த திட்ட அறிக்கை ஆய்வில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டார். அதன்பின்னர் 6 மாதங்கள் ஆகும் நிலையில் இன்னும் திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்காததை நியாயப்படுத்த முடியாது. கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டது.


ரெண்டு மாசத்தில் மாற்றம்... கோயம்பேடு கிடையாது- இனிமே கிளாம்பாக்கம் தான்!

இனியும் தாமதிக்கக் கூடாது

சென்னையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்க இப்போதுள்ள புறநகர் ரயில், நகரப் பேருந்து சேவைகள் போதுமானவை அல்ல. அதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். எனவே தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தான் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று நிதியை பெற முடியும். எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ராமதாஸ் ட்வீட்

புதிய புறநகர் பேருந்து நிலையம்

நடப்பாண்டிற்குள் பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது. இது கோயம்பேட்டை தொடர்ந்து சென்னையின் புதிய அடையாளமாக மாறவிருக்கிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்துகள் இங்கிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னைக்கு அடிச்ச ஜாக்பாட்... செம மாஸாக மாறப் போகும் கிளாம்பாக்கம்!

மெட்ரோ சேவை எப்போது?

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லவும், பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மெட்ரோ ரயில் சேவை பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

அடுத்த செய்தி