ஆப்நகரம்

சென்னை ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறப்பு!

கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் தமிழுக்கு பெருமை சேர்த்த பெண் புலவர் ஔவையாரின் சிலையை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார்.

TOI Contributor 14 Jul 2017, 7:09 pm
சென்னை : கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் தமிழுக்கு பெருமை சேர்த்த பெண் புலவர் ஔவையாரின் சிலையை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார்.
Samayam Tamil poetess avvaiyar statue inaugurated in raj bhavan chennai
சென்னை ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறப்பு!


பொதுமக்கள் ஆளுநர் மாளிகையை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கலாம் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 156 ஏக்கர் அளவுள்ள கிண்டி ஆளுநர் மாளிகையானது தற்போது மக்கள் சுற்றிப்பார்க்கும் இடமாக மாறியுள்ளது. இந்த பசுமையான மாளிகையில் பல விதமான மரங்கள் மற்றும் அரியவகை விலங்குகள் பல உள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் பார்வைக்காகவும், தமிழுக்கு பெருமை சேர்ந்த பெண் புலவர் ஔவையாருக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் கிண்டி ராஜ்பவனில் ஔவையாரின் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வெட்டை தொட்டதும் ஆத்திச்சூடி ஒலிக்கும் விதத்தில் இந்த சிலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் வெண்கலச்சிலை ராஜ்பவனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி