ஆப்நகரம்

மனைவி வீட்டில் இல்லாததால்...; மகள் என்றும் பார்க்காத தந்தை!

சென்னை வில்லிவாக்கத்தில் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பெற்ற தந்தையே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 6 May 2021, 10:37 am
வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil சிறுமிக்கு தொல்லையை விளக்கும் படம்
சிறுமிக்கு தொல்லையை விளக்கும் படம்


எனது கணவர் ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர். இந்நிலையில் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எங்களது 12 வயது மகளுக்கு எனது கணவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து எனது மகள் தற்போது என்னிடம் கூறி அழுகிறாள். எனது கணவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு எங்களை மிரட்டுகிறார். எனவே எனது கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.

இதுகுறித்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தனது 12 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் ஊரடங்கு; கிருஷ்ணகிரியில் வாகனங்கள் நிறுத்தம்!

இதனை தொடர்ந்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். பெற்ற தந்தையே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி