ஆப்நகரம்

அண்ணன், தம்பி பார்த்த வேலை; மொத்தமாக அள்ளியது போலீஸ்!

சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 40 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

Samayam Tamil 30 May 2021, 5:05 pm
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து ஆங்காங்கே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
Samayam Tamil கைது செய்யப்பட்ட படம்
கைது செய்யப்பட்ட படம்


மதுவுக்கு அடிமையான பலர் இதை வாங்கி குடிக்கின்றனர். இதுவும் கிடைக்காத பட்சத்தில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து குடிக்கின்றனர்.

இவர்களுக்கு ஒருபடி மேலே செல்லும் சிலர் வீடுகளில் சாராயம் காய்ச்ச தொடங்கி உள்ளனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பழந்தண்டலம் குடியிருப்பு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது அண்ணன், தம்பிகளான விஜி (38), வினோத் (23) ஆகியோரது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது.

என்னது இந்த கைதி இறந்துட்டாரா?; வேலூர் சிறையில் பரபரப்பு!

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜி மற்றும் வினோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 40 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

அடுத்த செய்தி