ஆப்நகரம்

சாமியார் கஞ்சா பிரசாதம்; போதையில் கிறங்கிய வாலிபர்கள்!

கோயில் வாசலில் கஞ்சா பிரசாதம் தந்து வாலிபர்களை போதையில் கிறங்க செய்து வந்த சாமியாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Samayam Tamil 24 Dec 2021, 12:19 pm
சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஐஸ் அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியமான கோயில்களின் வாசலில் அமர்ந்து சாமியார் ஒருவர் பிச்சை எடுப்பதுபோல நாடகமாடி கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil கைது செய்யப்பட்ட சாமியார்
கைது செய்யப்பட்ட சாமியார்



இதுதொடர்பாக உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில் ஐஸ்-அவுஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஐஸ் அவுஸ் இருசப்பன் தெருவில் உள்ள முருகன் கோயில் அருகில் சாமியார் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார். அவரிடம் மாறு வேடத்தில் இருந்த போலீசார் கஞ்சா பொட்டலம் இருக்கிறதா? என்று வாடிக்கையாளர் போல நைசாக கேட்டனர்.

2 வயது குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு; கடிதத்தில் பரபரப்பு!

உடனே அந்த சாமியார் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை எடுத்து போலீசிடம் கொடுத்தார். அவரை மாறு வேட போலீசார் அதிரடியாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர், ராயப்பேட்டை யானைகுளம் பகுதியை சேர்ந்த சேகர் (50) என்பதும், சாமியார் கோலத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து கோயில் வாசல்களில் அமர்ந்து பிச்சை எடுப்பதுபோல கஞ்சா பொட்டலம் விற்று வந்ததும் தெரிய வந்தது.

வேற ரூட்டில் பயம் காட்டிய போலீஸ்; மாரிதாஸ் ஷாக்!

இவர், கொடுக்கும் விசேஷ கஞ்சா பிரசாதத்தின் மூலம் இளம் சிட்டுகள் கிறங்கி கிடந்ததும், இதற்காகவே கோயில் கோயிலாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சுற்றி வந்ததும் தெரிய வந்தது.

அவர் கொடுத்த தகவல்படி அவருக்கு கஞ்சா சப்ளை செய்த தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜா (55), ஆண்டிப்பட்டி, தர்மராஜபுரத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (41) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி