ஆப்நகரம்

சொந்த அத்தையிடமா?; அட... கொடுமையே!

சென்னை திருவொற்றியூரில் சொந்த அத்தையிடம் நடந்துகொண்ட விதத்தால் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 23 Apr 2021, 2:47 pm
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் 48 வயது பெண். திருவொற்றியூர் ரயில் நிலைய ஊழியர். கடந்த 19ம் தேதி காலை இவர் வேலைக்கு செல்ல திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழ் ரயில்வே குடியிருப்பு நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
Samayam Tamil குற்றவாளியை கைது செய்வதை விளக்கும் படம்
குற்றவாளியை போலீஸ் கைது செய்வதை விளக்கும் படம்


அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துவிட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

துர்நாற்றம் வீசும் கழிவுகள்; கையால் அகற்றும் பணியாளர்!

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்த தம்பி மகன் கல்லூரி மாணவர் பாலாஜி (19) மற்றும் அவரது நண்பர்கள் திருமூர்த்தி (19), மேலும் ஒரு பாலாஜி (19), ஜெய் கிருஷ்ணா (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சவரன் நகை மற்றும் 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி