ஆப்நகரம்

15 வயது சிறுமி தற்கொலை; தந்தை சிக்கியது எதற்காக?

சென்னை அரும்பாக்கத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு இறந்த விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 11 May 2021, 3:26 pm
சென்னை அரும்பாக்கம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் 36 வயது பெண். சமையல் தொழிலாளி. இவருக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டதை விளக்கும் படம்
கைது செய்யப்பட்டதை விளக்கும் படம்


இதன் பிறகு கடந்த 2014ம் ஆண்டு விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை அந்த பெண் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் தனது 15 வயது மகளையும் தன்னோடு வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

புதுச்சேரியில் என்ன நடக்குது?; பாஜ மாநில தலைவர் விளக்கம்!

பின்னர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஓபிஎஸ்சை கடுப்பேத்தும் அதிமுக; இபிஎஸ் கை ஓங்குவதால் அதிருப்தி!

விசாரணையில் பிரபாகரன் தனது மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதற்கு சிறுமி இடையூறாக இருப்பதாக கூறி, ‘நீ இருக்க வேணாம். பேசாமல் செத்துப்போ’ என, கூறியதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை தற்கொலை செய்ய தூண்டியதாக பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி