ஆப்நகரம்

போதையில் தூங்கிய கணவன்; கொடூர மனைவி செய்த காரியம்!

நாள்தோறும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனை வீட்டுக்குள் பூட்டி பெட்ரோல் ஊற்றி மனைவியே எரித்துக்கொன்றார். இந்த சம்பவம் பள்ளிக்கரணையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 15 May 2021, 12:19 pm
சென்னை பள்ளிக்கரணை கைவேலி தந்தை பெரியார் நகரை சோ்ந்தவா் பாண்டி (40). சலவை தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (35). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
Samayam Tamil கணவனை கொன்ற மனைவி
கணவனை கொன்ற மனைவி


பாண்டி நாள்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அப்போது இருவரும் ஒருவருக்கொருவா் சரமாரியாக அடித்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

வழக்கம்போல் நேற்று தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பாண்டி தனது மனைவி பார்வதியை அடித்துள்ளார். தகராறு முடிந்து பாண்டி போதையில் வீட்டுக்குள் தூங்கினார்.

பின்னர் சிறிது நேரத்தில் பாண்டி உடல் தீப்பிடித்து எரிந்த நிலையில் கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பாண்டி உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மருத்துவமனையில் உயிருக்கு போராடிய பாண்டியிடம் எழும்பூா் நீதிமன்ற நீதிபதி மரண வாக்குமூலம் வாங்கினார்.

மாவட்ட எஸ்.பி நேரில் ஆஜர்; போலீசாருக்கு என்னாச்சு?

அதில் தனது மனைவி பார்வதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், தப்பிச்செல்லாமல் இருக்க வீட்டின் கதவை வெளிப்பக்கம் பூட்டியதாகவும் கூறினார். மேலும் வாக்குமூலம் அளித்த சிறிது நேரத்தில் பாண்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனை தொடர்ந்து மடிப்பாக்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்னை காரணமாக கணவரை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்றாரா? அல்லது பார்வதிக்கு கள்ளத்தொடா்பு ஏதேனும் இருக்குமா? என்று பார்வதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி