ஆப்நகரம்

மக்கள் பாதை அலுவலகத்தில் சுவர் ஏறிக்குதித்த போலீஸ்... தொடரும் உண்ணாவிரதம்

இரவு ஏறிக்குதித்த போலீசார், பெண்களை தரதரவென இழுத்து வண்டியில் ஏற்றினர். ​​அதில் பலருக்கும் காயமேற்பட்டுள்ளது. என்னை இழுக்கும்போது என் தலை அடிபட்டு உள்ளது.

Samayam Tamil 21 Sep 2020, 8:19 am
சென்னை மக்கள் பாதை அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் மேற்ற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போது, காவலர்களின் வன்முறை குறித்து ஏராளமான கேள்விகள் இருந்த நிலையில், அவற்றை உறுதிச் எய்யும் விதமாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil sagayam makkal pathai


நீட் தேர்வு திணிப்பு காரணமாகத் தமிழ்நாட்டில் 13க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த நீட் தேர்வுக்கு தடை கோரியும் அல்லது முறையான தீர்வு கோரியும் மக்கள் பாட்தை அமைப்பினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்றோடு 7ஆவது நாள்.

இந்த கொரோனா காலத்தில் அவசர அவசரமாக ஏன நடத்தி முடிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆம், பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படவில்லை. அவை காலவரையற்ற விடுமுறையிலிருந்து வருகிறது. இந்த சூழலில் நீட் தேர்வுக்கு மட்டும் ஏன் மாணவர்களை அலக்கழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விகளோடு நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக அரசைத் துளைக்கும் கேள்விகளும் இணைய, சூடு பிடித்தது உண்ணாவிரதம்.

நேற்றைய தினம் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ஆதரவுக்கரம் நீட்டுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இரவோடு இரவாக சுவர் ஏறிக்குத்தித்து காவலர்கள் போராட்டக்காரர்களை கைது செய்து ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளனர். பெண்களை மிக மோசமாக நடத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து கைது செய்துள்ளனர். வெளியில் தெரியாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அமைதியாக செய்யப்பட்ட இந்த கைது நடவடிக்கையின்போது காவலர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்ட்ட நிலையில், தற்போது இனை உறுதி செய்யும் விதமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆடியோவில், இரவு ஏறிக்குதித்த போலீசார், பெண்களை தரதரவென இழுத்து வண்டியில் ஏற்றினர். அதில் பலருக்கும் காயமேற்பட்டுள்ளது. என்னை இழுக்கும்போது என் தலை அடிபட்டு உள்ளது. இதேபோல பலருக்கும் காவலர்கள் இழுத்ததால் காயமேற்பட்டுள்ளது. பெண்களை தொடக்கூடாத இடங்களில் தொட்டும், அடித்தும் காயப்படுத்தினர். இப்போது மருத்துவமனையிலும் உண்ணாவிரதம் தொடர்கிறது. இதுவரை மூவருக்கு கட்டாயப்படுத்தி குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். இன்னும் மூவர் குளூக்கோஸ் ஏற்றிக்கொள்ளாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையிலும் எங்களுக்கு சிகிச்சையோ மருத்துவமோ வழங்கப்படவில்லை. ப்யருக்கு இங்கு கொண்டு வந்து வைத்திருக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி