ஆப்நகரம்

காவல்துறையினருக்கு கட்டாய வார விடுமுறை அவசியம்: நீதிபதி கிருபாகரன் கருத்து

காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய வார விடுப்பு அளிக்க வேண்டும் என்பது அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Jul 2018, 7:16 pm
காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய வார விடுப்பு அளிக்க வேண்டும் என்பது அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து கூறியுள்ளார்.
Samayam Tamil justice_kirubhakaran
காவல்துறையினருக்கு கட்டாய வார விடுமுறை அவசியம்: நீதிபதி கருத்து


சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினருக்கு கட்டாய வார விடுமுறை வழங்குவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

அப்போது பேசிய அவர், காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கருத்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, வார விடுப்பில் பணிக்கு வரும் காவலர்களுக்கு ரூ. 200 தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டிருந்தால், இந்த ஊதியம் படிபடியாக நிறுத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கு வார விடுப்பு அவசியம். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வரும் ஜூலை 19ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு இணங்காமல், பொதுமக்கள் காவல்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காவலர்கள் காப்பாற்ற வேண்டும்.

மேலும், கட்சி அடையாளங்களுடன் செல்லும் வாகனங்களை போலீசார் கண்காணிக்க வேண்டும். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பதே தெரியாது என்று இது தொடர்பான கருத்தில் நீதிபதி கிருபாகரன் கூறினார்.

அடுத்த செய்தி