ஆப்நகரம்

மதுக்கூடத்தில் சூதாடியவர்களை சுற்றி வளைத்த போலீஸ்!

தாம்பரத்தில் தனியார் மதுபான பாரில் சூது ஆடிய 15 பேர் செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும், 20 சீட்டுக் கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Samayam Tamil 6 Nov 2020, 3:40 pm
சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் உணவு விடுதி மற்றும் மதுபான பார் இயங்கி வருகிறது. இதில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தாம்பரம் உளவுத் துறை போலீசார் சுரேஷ், மதுசூதனன், ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil தாம்பரம் -மதுக்கூடம்
தாம்பரம் மதுக்கூடத்தில் சூதாட்டம்


அதனடிப்படையில் தாம்பரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையில் போலீசார் மதுபான பாரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் பணம் வைத்து அங்கு சூதாட்டம் விளையாடப்பட்டு வந்தது தெரியவந்தது அதன் பேரில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மணி, ரங்கா, ரவிகுமார், பிரவின், கோதண்டன், வெங்கட் ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 2..6 லட்சம் ரூபாய் பணம், 20 சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆட்டோ ஸ்டாண்டில் பாஜகவினர் அடாவடி...போலீசாருடன் தள்ளுமுள்ளு!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவலை கொடுத்த உளவுத் துறை போலீசாரை காவல் துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

அடுத்த செய்தி