ஆப்நகரம்

மெரினாவில் கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டமா? : போலீஸ் கண்காணிப்பு

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TNN 23 Jul 2017, 9:15 am
சென்னை: கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil police security tighten in chennai marina
மெரினாவில் கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டமா? : போலீஸ் கண்காணிப்பு


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜுன் 30-ல் திடீரென்று எண்ணெய் குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டது.

இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடந்துவிடாமல் பாதுகாப்பதற்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிகட்டுப் போராட்டத்தைப் போன்று கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக யாரும் இறங்கிவிடக்கூடாது என்பதில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி