ஆப்நகரம்

மாஸ்க் போடலைன்னா கேஸ் போடுவாங்களாம்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 4 Jun 2020, 1:28 pm
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,598 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil police will file a case against those who do not wear masks


நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில் சென்னைக்கான கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், “கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னை முழுக்க இல்லை. தண்டையார் பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மட்டும்தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது.

கொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்!

மண்டலம் வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் வார்டு வாரியாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்கள் நெருக்கம் அதிமுள்ள நகரங்களில்தான் பிற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைப் பின்பற்றினாலே விரைவில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முடியும்” என்று கூறினார்.

கொரோனா: அடையாறு மக்களுக்கு ஒரு அதிர்ச்சி நியூஸ்!

முகக் கவசம் அணியாமல் நடமாடினால் அவர்களை முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவதுடன் காவல் துறையினர் வழக்கும் பதிவு செய்வார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி