ஆப்நகரம்

பஸ்ஸுக்கு காத்திருந்த இளம்பெண்ணிடம் போலீஸ் செஞ்ச வேலைய பாருங்க!

பஸ்ஸுக்கு காத்திருந்த இளம்பெண்ணிடம் குடிபோதையில் தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Samayam Tamil 8 Dec 2020, 1:34 pm
சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த இளம்பெண் (20) ஒருவர், வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட போலீஸ்
இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட போலீஸ் - வடபழனி, சென்னை


நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிமுடித்து வீடு திரும்ப, 100 அடி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக டூ வீலரில் வந்த நபர் ஒருவர், அந்த பெண்ணிடம் வம்பிழுத்ததுடன் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

வடமாவட்டங்களில் இன்னமும் வைரலாக இருக்கும் கொரோனா வைரஸ்!

இளம்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கு குவிந்த பொதுமக்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து, வடபழநி போலீசிடம் ஒப்படைத்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் எம்ஜிஆர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜு (45) என்பது தெரிய வந்தது.

மழைநீர் தேங்கியுள்ள ஏரியாக்களுக்கு கல்வி அமைச்சர் விசிட்!

இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றத்துக்காக, ராஜு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவின் பெயரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி