ஆப்நகரம்

ஓடு....கொரோனா ஓடு....; நாங்களும் இறங்குவோம்!

கொரோனா தாக்குதலில் இருந்து மக்கள் விடுபட வேண்டி மாமல்லபுரத்தில் பூஜை நடத்தப்பட்டது.

Samayam Tamil 30 Apr 2021, 3:11 pm
கொரோனா நோய் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் ராமானுஜர் கூடத்தில், மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
Samayam Tamil குலசேகர ஆழ்வார் ராமானுஜர் கூடம்
குலசேகர ஆழ்வார் ராமானுஜர் கூடம்


காவலர்களை குறி வைக்கும் கொரோனா?; மரத்தடியில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்!

இந்த பூஜையில் கொரோனா தாக்குதலில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டும் என வேண்டி நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டது. இந்த பூஜைக்கு குலசேகர ஆழ்வார் ராமானுஜர் அறக்கட்டளை தலைவர் சுவாமி நெய்குப்பி கிருஷ்ணராமானுஜதாசன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மாமல்லபுரம்தலசயன பெருமாள், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் சாமி படங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது, கொரோனா நோய் தொற்றில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்ளப்பட்டது.

அடுத்த செய்தி