ஆப்நகரம்

குப்பை மேலாண்மையில் குப்பையாக இருப்பதா? பூவுலகின் நண்பர்கள் கேள்வி

தமிழக அரசு குப்பை மேலாண்மையைக் கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தியாவிலேயே பல பகுதிகளில் சிறந்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

Samayam Tamil 28 Oct 2020, 10:24 pm
கொரோனா காலத்தில் அதிகமாக அகவனம் பெற்ற இரு துறைகளில் ஒன்று சுகாதாரப் பணித்துறை. நோய்ப்பரவலைக்குறைக்க முறையான சுகாதாரப் பராமரிப்ப்பு இன்றியமையாததைப் போலவே இவர்களின் பணியும் இன்றியமையாதது. ஆனால், சேகரமாகும் குப்பைகளை எப்படி மேலாண்மை செய்கிறார்கள் என்பதில்தான் ஒரு நிர்வாகத்தின் உச்சகட்டமேலாண்மைத்திறன் இருக்கிறது.
Samayam Tamil பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட படம்


ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை அது கேள்விக்குறிதான். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, அரசின் குப்பை மேலாண்மை குறித்து வெளியிட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, தமிழக அரசு குப்பை மேலாண்மையைக் கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தியாவிலேயே பல பகுதிகளில் சிறந்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன.



ஆனால் அரசோ குப்பைகளைக் கையாள எந்த அறிவியல்பூர்வமான நீண்டகால அளவில் பயனளிக்கக்கூடிய உருப்படியான திட்டங்களையும் குறித்து சிந்திக்காது கவர்ச்சி வார்த்தைகளை மட்டும் முதலீடாகக்கொண்டு பலகோடிகளை குப்பை மேலாண்மை என்ற பெயரில் விரயம் செய்கிறது.

தரம் பிரிக்கப்பட்டு பெறப்படும் குப்பைகள்கூட சேர்த்து வண்டியிலேற்றி நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. புறநகர்ப் பகுதிகளிலோ குப்பைகள் நகராட்சி ஊழியர்களாலேயே கொட்டப்படும் இடங்களிலேயே தீவைத்து எரிக்கப்படுகின்றன.” என்று தெரிவித்திருந்த அந்தப் படத்தை பல்வேறு சூழலியல் ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி