ஆப்நகரம்

குரல்மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட நிர்மலா தேவி..!!

குரல்மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலாதேவியை மதுரை காவல்துறையினர் இன்று சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

Samayam Tamil 27 Jun 2018, 3:58 pm
குரல்மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவியை மதுரை காவல்துறையினர் இன்று சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
Samayam Tamil 64733683
சென்னை வந்தார் பேராசிரியை நிர்மலா தேவி.... காரணம் இதுதான்


மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தவறான பாதைக்கு சில மாணவிகளை அழைக்கும் விதமாக தொலைபேசியில் நிர்மலா தேவை பேசிய உரையாடல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 17ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் குரல்மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்ல சிபிசிஐடி அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நிர்மலாதேவியை மூன்று நாட்கள் மட்டும் சென்னைக்கு அழைத்து சென்று விசாரிக்க அனுமதி வழங்கினர். அதற்காக மதுரை போலீசார் நிர்மலாதேவியை இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நாளை அவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அதுவரை அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 29ம் தேதி மதுரை சிறைக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்து செல்லப்படுவார்.

அடுத்த செய்தி