ஆப்நகரம்

சென்னையில் செம கிளைமேட்... இதான் காரணம்!

புரேவி புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று குளிர்ந்த வானிலை நிலவுவதால் மாநகரில் குற்றாலம் போல் குளுகுளுவென உள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 12:27 pm
வங்க கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புரேவி புயலாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Samayam Tamil சென்னை இன்றைய வானிலை நிலவரம்


அதேசமயம் இந்த புயலின் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படியே, இன்று காலை முதலே ஆலந்தூர், சைதாப்பேட்டை, வடபழநி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளி்ட்ட புறநகர் பகுதிகளிலும் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.

சென்னை டிராஃபிக்கை குறைக்க விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இன்னொரு சாலை!

மாநகரின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சாரல், தூரல் மழை பெய்து வருவதால் சென்னை க்ளைமேட் தற்போது குளுகுளு குற்றால பருவநிலை போல மாறியுள்ளது.

அடுத்த இரு தினங்களுக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த வானிலையே நிலவும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி