ஆப்நகரம்

எலக்ட்ரிக் ட்ரைன் பயணிகளுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்!

சென்னையில் கூடுதல் எண்ணிக்கையில் மின்சார ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கை 244 ஆக உயரவுள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 9:26 am
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்களின் வசதிக்காக தற்போது நாள்தோறும் 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 40 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
Samayam Tamil கோப்பு படம்
சென்னை புறநகர் ரயில் சேவை


"கொரோனா பொதுமுடக்க தளர்வுக்கு பிறகு அரசுப் பணியாளர்கள், கொரோனா தடுப்பு முதல் நிலை பணியாளர்கள் உள்ளிட்டோருக்காக முதற்கட்டமாக 150 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த ரயில்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரிக்கப்பட்டது

தற்போது நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா... மாநகரில் ஆறு மாதத்துக்கு பிறகு நிகழ்ந்துள்ள ஆச்சரியம்!

கூடுதலாக 40 ரயில்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கை 244 ஆக இருக்கும்" என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், "சென்னையின் புறநகர்களான செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த ரயில்கள் இனி திருத்தணி வரை இயக்கப்படும். இதற்கான பயண அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்" என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி