ஆப்நகரம்

ஒரே நாளில் சென்னையில் அதிகபட்சமாக 18 செ.மீ மழைப்பதிவு!

நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சென்னை தாம்பரத்தில் மட்டும் 18 செ.மீ மழைப் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNN 31 Oct 2017, 10:51 am
சென்னை: நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சென்னை தாம்பரத்தில் மட்டும் 18 செ.மீ மழைப் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil rain fall measured high in chennai tambaram after yesterdays heavy rain
ஒரே நாளில் சென்னையில் அதிகபட்சமாக 18 செ.மீ மழைப்பதிவு!


தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
Morning update of #Chennairains in and around Chennai pic.twitter.com/fyONQdP5to — Chennairains (@ChennaiRains) October 31, 2017 இந்நிலையில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை தாம்பரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம் ஏரி அருகே 17.6 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Badly waterlogged gengu Reddy subway @ Egmore. #ChennaiRains pic.twitter.com/AaIh2pGTB2 — Chennairains (@ChennaiRains) October 30, 2017 மேலும் மீனம்பாக்கத்தில் 16.9 செ.மீ மழையும், புழல் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தில் 14.5 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Rain fall measured high in Chennai Tambaram after yesterday’s heavy rain.

அடுத்த செய்தி