ஆப்நகரம்

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை: கூல் மோடில் மக்கள்!

சென்னையில் நேற்றிரவு மழைபெய்த நிலையில் வெப்பம் குறைந்துள்ளது.

Samayam Tamil 12 Aug 2020, 8:57 am
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil chennai rain


தமிழ்நாட்டின் பெரும்பாலான அணைகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழையை நம்பியே உள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு இயற்கை ஏமாற்றாமல் அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணைகளின் நீர் இருப்பு உச்சபட்ச அளவை நோக்கி உயர்ந்து வருகின்றது.

அணைகள் நிரம்புவதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே சமயம் நீலகிரி மாவட்டம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

சென்னை நாவலூரை பரபரப்பாக்கிய 15 வயது சிறுமி..! திகில் படங்களை மிஞ்சிய செயல்...

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மட்டுமல்லாமல் கடந்த சில நாள்களாக சென்னையிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது.

சென்னையில் சர்வதேச விமானப் போக்குவரத்து: பஸ் எப்ப சார் விடுவீங்க?

சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் நல்ல மழை பெய்தது. திருவல்லிகேனி, ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கே.கே.நகர், கிண்டி, திருவான்மியூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதேபோல் தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

அடுத்த செய்தி