ஆப்நகரம்

சொத்து வரி செலுத்தினார் ரஜினிகாந்த்... பணம் வந்தது எப்படி?

வரி செலுத்த இன்று இறுதிநாளாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது சொத்து வரியை செலுத்தினார்.

Samayam Tamil 15 Oct 2020, 1:13 pm
சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் சொத்து வரிக்கான காசோலையை நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார்.
Samayam Tamil rajini


நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதல், அக்டோபர் வரையிலான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் ராகவேந்திரா மண்டபத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று இரவு (அக்டோபர் 15) 12 மணிக்குள் ரூ. 6.5 லட்சம் வரியை ரஜினி கட்ட தவறினால் அவருக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்குப் பிறகு ரஜினிகாந்த் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்” என்று பதிவிட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் சொத்து வரிக்கான காசோலையை நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார். வரி செலுத்த இன்றுதான் இறுதிநாளாக இருந்த நிலையில் ரஜினிகாந்த் தனது சொத்து வரியை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வருமானமே இல்லை பணம் கட்ட முடியாது என்று மனுத்தாக்கல் செய்த ரஜினிகாந்த், இப்போது எப்படி பணம் கட்டினார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி