ஆப்நகரம்

மெரினாவில் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்: ரஜினி வேண்டுகோள்

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 7 Aug 2018, 10:51 pm
கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil tamil-karunanidhi-death
கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்ய ரஜினி வேண்டுகோள்


காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக சார்பில், தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருப்பதாக கூறி தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளன. இதற்காக திமுக-வினர் பலர் வேண்டும்.... வேண்டும்... மெரினா வேண்டும்.. என்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.



இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழக அரசியல் களத்தில் மாபெரும் தலைவராக விளங்கிய கலைஞர் கருணாநிதிக்கு அது தான் நாம் தரும் தகுந்த மரியாதையாக இருக்கும் எனவும் ரஜினிகாந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகரசை குறிப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஜெயலலிதாவிற்கு அளித்த மரியாதையை கருணாநிதிக்கும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி