ஆப்நகரம்

மகள் நடனமாடிய நிகழ்வில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸிற்கு கௌரவம்!

சென்னை: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியில் கௌரவம் செய்யப்பட்டது.

Samayam Tamil 21 Dec 2018, 9:57 pm
சென்னை மைலாப்பூரில் பாரதிய வித்யா பவன் அமைந்துள்ளது. இங்கு 44வது கலைத் திருவிழா நடைபெற்றது. இதற்காக கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
Samayam Tamil Sakthi Kantha Das


அதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸின் மகள் அன்வேஷா தாஸ் பரத நாட்டியம் ஆடினார். இதைக் காண சக்தி காந்த தாஸ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அன்வேஷா தாஸ் மிகச் சிறப்பாக தனது திறனை வெளிப்படுத்தினார். இதனை அனைவரும் வெகுவாக கண்டு ரசித்தனர். இந்த நாட்டிய நிகழ்ச்சியின் அற்புத புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் தலைவர் கே.எம்.நரசிம்மன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் பதவியேற்றார்.

இவர் மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினரும் ஆவார்.

அடுத்த செய்தி