ஆப்நகரம்

இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் சென்னை பொண்ணுக்கு இரண்டாமிடம்!!

இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில், சென்னையைச் சேர்ந்த ரோஷினி நாடார் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

Samayam Tamil 14 Aug 2018, 8:10 pm
இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில், சென்னையைச் சேர்ந்த ரோஷினி நாடார் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Samayam Tamil இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் சென்னை பெண்ணுக்கு இரண்டாமிடம்!!
இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் சென்னை பெண்ணுக்கு இரண்டாமிடம்!!


இந்தியாவின் பணக்காரப் பெண்களுக்கான பட்டியலை கோடாக் வெல்த் ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோத்ரேஜ் நிறுவனத்தின் ஸ்மிதா கிரிஸ்னா ரூ.35,000 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இவரைத் தொடர்ந்து, ஹெச்.சி.எல் ஐ.டி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான, சென்னையைச் சேர்ந்த ரோஷினி நாடார் ரூ.30,000 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில், டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் 26,000 கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்திலும், பையோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும் தார் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

அடுத்த செய்தி