ஆப்நகரம்

ரியால், திராம், பவுண்ட்; ரூ.7 லட்சம் கலர் கலர் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்...!

விமான நிலையத்தில் விதிமுறைகளை மீறி, வெளிநாட்டு நாணயங்கள் கொண்டு வந்தவரை கைது செய்தனர்.

TNN 20 Aug 2017, 1:49 pm
சென்னை: விமான நிலையத்தில் விதிமுறைகளை மீறி, வெளிநாட்டு நாணயங்கள் கொண்டு வந்தவரை கைது செய்தனர்.
Samayam Tamil rs 7 lakh smuggled cash seized at airport
ரியால், திராம், பவுண்ட்; ரூ.7 லட்சம் கலர் கலர் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்...!


சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான எண்:128ல் செல்ல கருப்பையா வேட்டப்பன் விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவரைச் சோதனை செய்த சுங்கவரித் துறையினர் ஏராளமான வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

அவரிடமிருந்து 9,000 சவுதி ரியால், 7,500 யுஏஇ திராம்ஸ், 850 ஓமன் ரியால், 140 பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் 200 குவைத் தினார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் கொழும்பு வழியாக, அபுதாபி செல்லவிருந்தது கண்டறியப்பட்டது. இதேபோல் கடந்த 17ஆம் தேதி இரவு, தாய் ஏர் ஏசியா விமானம் FD 153 மூலம் சென்னை விமான நிலையம் வந்த கஞ்சன் பன்சால் என்பவரிடம் இருந்து, ரூ.14 லட்சம் மதிப்பிலான 500கிராம் தங்கத்தை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Rs 7 lakh smuggled cash seized at airport.

அடுத்த செய்தி