ஆப்நகரம்

சசிகலாவை எதிர்த்து மாணவர் புரட்சி?- மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை எதிர்த்தும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 9 Feb 2017, 1:27 pm
முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை எதிர்த்தும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil rumors spreading youths may protest against sasikala in marina beach
சசிகலாவை எதிர்த்து மாணவர் புரட்சி?- மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களும், பொதுமக்களும் அலை அலையாக திரண்டு வந்து, இரவு, பகல் பார்க்காமல் அமைதியாகப் போராட்டம் நடத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, போராட்டம் நடத்தியவர்கள், அடித்து, விரட்டப்பட்டனர். இந்நிலையில், தற்போது முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவமானப்படுத்தியதாகப் புகார் கூறியுள்ளார். அவருக்கு, மாணவர்களிடையே பெரும் ஆதரவு எழுந்துள்ளது.

சசிகலாவை கண்டித்து, போராட்டம் நடத்தப் போவதாக, வாட்சாப், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், மெரினா கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும், நகரின் பல இடங்களில் உள்ள சமுதாய நலக்கூடம், திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் போராட்டத்தைத் தடுக்கவா அல்லது கவர்னர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர இந்த ஏற்பாடா எனத் தெரியாமல், சென்னைவாசிகள் குழப்பமடைந்துள்ளனர்.

Rumors spreading students may protest against Sasikala in Marina beach.

அடுத்த செய்தி