ஆப்நகரம்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்... நள்ளிரவில் பரபரப்பு!

சென்னையின் பிரதான சாலையான ஜிஎஸ்டியில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 3 Dec 2020, 10:33 am
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜீஎஸ்டி சாலையில் வெள்ளை நிற இனோவா கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. கூடுவாஞ்சேரியில் இருந்து குமார் என்பவர் வெள்ளை நிற இன்னோவா காரில் மேடவாக்கத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
Samayam Tamil car fire chennai


அப்போது பெருங்களத்தூர் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளி வந்ததை அறிந்து குமார் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் காரை விட்டு இறங்குவதற்குள் கார் முற்றிலும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இந்த விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் நேற்று நள்ளிரவிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து எரிந்துகொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர்.

அடுத்த செய்தி