ஆப்நகரம்

நடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..!!

போலீஸ் உடையில் காவல்துறையினரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட நடிகை நிலானிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 21 Jun 2018, 3:11 pm
போலீஸ் உடையில் காவல்துறையினரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட நடிகை நிலானிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil nilani-cover-pic
நடிகை நிலானிக்கு 15 நாட்கள் போலீஸ் காவல்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் உடை அணியவே உடம்பு கூசுவதாக தெரிவித்து நடிகை நிலானி வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதை தொடர்ந்து நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து நேற்று குன்னூரில் கைது செய்யப்பட்ட நிலானி, அங்குள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து அவர், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 5ம் தேதி வரை நிலானியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனிடையே பிணை கேட்டு நடிகை நிலானி தாக்கல் செய்துள்ள மனு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்