ஆப்நகரம்

jayalalithaa memorial: ஜெயலலிதா மணிமண்டப திறப்பு விழாவுக்கு தடை?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மணிமண்டப பணியினை முடித்தும் இதுநாள் வரை தங்களுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2021, 9:54 pm
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கலைவர் யுவராஜ், சென்னை எழிலகம் முன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
Samayam Tamil மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ்
ஜெயலலிதா மணிமண்டப கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ்


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் நிறுவ தமிழக அரசின் பொதுப்பணித் துறை மூலம் கட்டுமானப் பணி தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தரப்பட்டது.

இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு பணிகளை செய்ய பல நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணி வழங்கப்பட்டது. செய்த பணிகளுக்கான தொகை அவ்வப்போது சிறிது சிறிதாக காசோலை மூலம் வழங்கப்பட்டது.

ஆனால் அதன்பின் கொரோனா பாதிப்பால் செய்து முடித்த பணிகளுக்கான தொகை வழங்கப் படாமல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!

இதன்படி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நான்கு நிறுவனங்களுக்கு இன்றுவரை நிலுவைத் தொகை ரூபாய் 68 லட்சம் வழங்கப்படாமல் இழுத்து அடிக்கப்படுகிறது.

முதன்மை ஒப்பந்ததாரரிடம் இந்த பாக்கி தொகை குறித்து கேட்டால் எங்களுக்கு அரசு பணம் தரவில்லை எனக் கூறி கைவிரிக்கிறார்கள்.

ஒப்பந்ததாரருக்கு முழு தொகையினை பொதுப்பணித்துறை வழங்கினால் மட்டுமே எங்களைப் போன்ற ஏழு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான நிலுவைத் தொகை கிடைக்கும்.

தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

அனைத்து நிறுவனங்களுக்கும் நிலுவையில் உள்ள கிட்டத்தட்ட சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிலுவைத் தொகையை வழங்க பொதுப்பணித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி தராத பட்சத்தில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் பணியிலேயே முறைகேடு செய்வதாக கருத வேண்டும்.

அத்துடன் இந்த அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா நினைவு மண்டபத் திறப்பு விழாவுக்கு தடை செய்யக்கோரி, தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிப்போம் என்று யுவராஜ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி