ஆப்நகரம்

ஒருதலை காதல்... தறுதலை இயக்குநர் மீது இளம் நடிகை பாலியல் புகார்!

வெப் சீரிஸில் நடிக்க வந்த இளம் நடிகைக்கு படப்பிடிப்பின்போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கதாநாயகி அளித்த புகாரின் பேரில் இளம் இயக்குநரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 18 Dec 2020, 10:54 am
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள சாய் நிவாஸ் எனும் தனியார் ரெசார்டில் வெப் சீரிஸ் ( '3 சம்') படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 22 வயதான (ஸ்வேதா) கதாநாயகியாக நடித்துள்ளார்.
Samayam Tamil இயக்குநர் மீது பாலியல் புகார்


ரஞ்சித் என்ற இளைஞர் இயக்குனராகவும், அவருக்கு உதவியாளர்களாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்தது.

கடந்த 15 ஆம் தேதி அக்கரையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது இயக்குநர் ரஞ்சித், அவருடைய உதவியாளர்கள் கார்த்திக், ரியாஸ் மூவரும் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக ஸ்வேதா கானத்தூர் போலீஸ் புகார் அளித்தார்.

பாவடைக்குள் வைத்து முந்திரி, பாதாம் திருட்டு... தாய், மகள் கைது!

புகாரை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த கானத்தூர் ஆய்வாளர் வேலு, இயக்குநர் ரஞ்சித், அவருடைய உதவியாளர்கள், ஸ்வேதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ஸ்வேதா ஒரு மாதம் தனியே (லிவிங் டூ கெதர்) தன்னுடன் வாழ்ந்து வந்ததாக ரஞ்சித் மற்றும் அவருடைய உதவியாளர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ரஞ்சித் ஒருதலையாக ஸ்வேதாவை காதலித்து வந்ததாகவும், அதீத காதல் கொண்டதால், அவருடைய கைகளில் ஸ்வேதாவின் பெயரை பச்சை குத்தி கொண்டிருந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்யாணமாகி ஒன்றரை மாதம்தான்... தூக்கில் தொங்கிய புதுமணப் பெண்

சம்பவம் நடைபெற்ற அன்று படப்பிடிப்பின்போது அறையில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய காதலை ஸ்வேதாவிடம் ரஞ்சித் கூறியுள்ளார்.

அதற்கு ஸ்வேதா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது ஸ்வேதாவை ரஞ்சித் அடித்ததால் படப்பிடிப்பின் போது இயக்குநர்-கதாநாயகியை அடித்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

பின்னர் ஸ்வேதா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்துள்ளதை தொடர்ந்து கானத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். ஸ்வேதாவிடம் நடத்திய விசாரணையில் லிவிங் டூ கெதர் குறித்து போலீசார் கேட்டபோது, 'அப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழவில்லை' என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கோயில் போன மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை!

மேலும் தன்னை காதலிப்பதாக கூறிய ரஞ்சித் தன்னை கண்மூடித்தனமாக அடித்ததாகவும், அதைத்தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாலும் அவர் மீது போலீஸ் புகார் கொடுத்தேன் என்றும் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இயக்குநர் ரஞ்சித் மீது 294b, 323, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆகிய மூன்று பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார், ரஞ்சித்தை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அடுத்த செய்தி