ஆப்நகரம்

சென்னை வனப்பகுதியில் அதிர்ச்சி - புள்ளி மான்கள் இறப்பு குறித்து வெளியான ரிப்போர்ட்!

கடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மான்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Nov 2019, 9:09 am
சென்னையில் உள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் வளாகங்களில் 1,500 மான்கள் சுற்றி திரிந்தன.
Samayam Tamil Deer


இவற்றின் நலன் கருதி வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக வனத்துறை எடுத்தது. இந்த சூழலில் மான்களை பிடிக்கவும், வேறு இடங்களுக்கு மாற்றவும் தடை விதிக்கக் கோரி முரளிதரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

பிரதமர் மோடி - ஜி.கே.வாசன் சந்திப்பின் பின்னணி? டெல்லியில் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!

இந்த வழக்கு விசாரணையில் வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கட்டுமானங்கள் அதிகரிப்பு, நாய்கள் கடிப்பது, வாகன விபத்துகளில் சிக்குவது, வேட்டையாடப்படுதல், கழிவு நீரைக் குடித்தல் போன்றவற்றால் ஏராளமான மான்கள் உயிரிழக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் சென்னை நகருக்குள் மட்டும் 497 புள்ளி மான்கள் உயிரிழந்துள்ளன. இதைத் தடுக்கவே மான்களை பிடித்து பாதுகாப்பான இடங்களிலும், தேசிய பூங்காக்களிலும் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தினகரன் பக்கம் அடுத்தடுத்து வீழும் விக்கெட்கள்... முன்னாள் அமைச்சர் என, 105 பேர் அதிமுகவில்...

முதல்கட்டமாக மான்கள் கிண்டியில் 15 நாட்கள் பரிசோதனையில் வைக்கப்படும். பின்னர் விதிமுறைகளின் படி இடமாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு முரளிதரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் கிட்டகூட லஞ்சம்... கையும் களவுமாகச் சிக்கிய இன்ஜினியர்!

அடுத்த செய்தி