ஆப்நகரம்

பயணிகளை ஏமாற்றிய ஏர் இந்தியா விமானம் .!

சென்னை: சிங்கப்பூர் செல்ல வேண்டிய பயணிகள் 230 பேர், இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

TNN 23 Oct 2017, 10:56 am
சென்னை: சிங்கப்பூர் செல்ல வேண்டிய பயணிகள் 230 பேர், இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
Samayam Tamil singapore passengers wait 23 hours in chennai airport
பயணிகளை ஏமாற்றிய ஏர் இந்தியா விமானம் .!


சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு, நேற்று காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த 230 பயணிகள், பாதிப்புக்குள்ளாகினர்.

இன்று காலை 9.30 மணிக்கு விமானம் புறப்படும் என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டதால், பயணிகள் வேறு வழியின்றி விமான நிலையத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது வரை புறப்பாட்டிற்கான எந்த ஆயத்த நிலைகளும் நடக்கவில்லை. இதனால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமான பயணிகள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

Singapore passengers wait 23 hours in Chennai airport.

அடுத்த செய்தி