ஆப்நகரம்

சென்னையைச் சூழ்ந்த புகையால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு: பொதுமக்கள் அவதி!

சென்னையைச் சூழ்ந்துள்ள புகைமூட்டத்தால் விமானச் சேவை, ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் பொங்கல் தினத்தன்று ஊருக்குச் செல்வோர் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்

Samayam Tamil 13 Jan 2018, 9:44 am
சென்னையைச் சூழ்ந்துள்ள புகைமூட்டத்தால் விமானச் சேவை, ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் பொங்கல் தினத்தன்று ஊருக்குச் செல்வோர் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.
Samayam Tamil smog due to bhogi ten chennai flights diverted no landing and departure since 330 am visibility dips to 50 metres
சென்னையைச் சூழ்ந்த புகையால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு: பொதுமக்கள் அவதி!


பொங்கல் தினத்தின் முதல் நாளான இன்று போகித் திருநாள் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என அழைக்கப்பட்டு இந்தத் திருநாளில், மக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.

இதையடுத்து, சென்னை மக்கள் நேற்று இரவிலிருந்தே தங்கள் வீட்டில் இருந்த பொருட்களை எரிக்கத் தொடங்கினார். இதனால், இன்று காலை பனியுடன் புகை கலந்து சென்னை முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

இந்த புகைமூட்டத்தால், போக்குவரத்து சேவைகள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. சாலைகளில் 50 மீட்டருக்கு மேல் எதுவும் தெரியாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதுமட்டுமின்றி, ரயில் சேவைகளும் புகைமூட்டத்தால் அரை மணிநேரம் தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

அதிகாலை முதலே நிலவும் புகைமூட்டத்தால் சென்னை விமான நிலையத்திலும் விமான சேவைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. காலை 3 மணிமுதல் சென்னை விமானநிலையத்தில் விமானசேவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொங்கல் தினத்தன்று சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள காற்று மாசுபாட்டால் வெளியே செல்லும் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், தொண்டையில் கரகரப்பும் கண்களில் எரிச்சலும் உண்டாவதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

அடுத்த செய்தி