ஆப்நகரம்

சென்னை டூ திருப்பதி... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திருமலை திருப்பதி ஆன்மிக சுற்றுலா பயணம் ஒன்பது மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Jan 2021, 8:52 pm
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் வசதிக்காக, ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையிலிருந்து திருமலை திருப்பதிக்கு ஒருநாள் ஆன்மிக சுற்றுலா பயணத் திட்டம் நடைமுறையில் இருந்தது.
Samayam Tamil கோப்பு படம்
சென்னை டூ திருப்பதி ஒருநாள் ஆன்மிக பயண சேவை மீண்டும் தொடக்கம்


இந்த ஆன்மிக பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர், சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து காலை 5 மணிக்கு பேருந்தில் அழைத்து செல்லப்படுவர்.

இந்த பயணத்தில் திருமலையில் திருப்பதி தரிசனம், கீழ் திருப்பதியில் பத்மாவதி தாயார் தரிசனம் உள்ளிட்டவை இடம்பெறும். பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்படும். தரிசனம் முடித்து இரவு 8:30 மணிக்கு பயணிகள் சென்னைக்கு திரும்பி விடலாம்.

பொங்கல் பண்டிகை...விடிய விடிய பஸ் சர்வீஸ்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏழுமலையான் பக்தர்களுக்கு மிகவும் ஏதுவாக இருந்த இத்த சுற்றுலா பயணம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த தரிசன பயண சேவை 5 ஆம் தேதியில் (ஜனவரி 5) இருந்து மீண்டும் தொடங்கியுள்ளதாக ஆந்திரா சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை டூ கோவை...ரயில் பயணிகளுக்கு பொங்கல் ஹேப்பி நியூஸ்!

இதில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், பயண டிக்கெட்டுகளை தி.நகரில் உள்ள அலுவலக கவுன்ட்டரிலோ, www.aptdc.in, www.aptourism.gov.in ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களை 98405 80577, 044 2435 3373 ஆகிய எண்களில் பெறலாம்.

அடுத்த செய்தி