ஆப்நகரம்

ரயிலில் பயணம் செய்ய இதையெல்லாம் செஞ்சிடுங்க - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Samayam Tamil 8 Jan 2022, 1:46 pm
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை சுமார் 22 கோடி பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் 3,071 பேர் தற்போது வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 41,986-ஐ கடந்துள்ளது.
Samayam Tamil Chennai Suburban Railway News


இந்த நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் என்பது மூன்றாவது அலை பரவல் மற்றும் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 10,000-ஐ நெருங்கியுள்ளது.

இதனிடையே, தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், உணவு, பத்திரிகை உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் நாளை 343 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளனர். வழக்கமாக 670 மின்சார ரயில் சேவையில் நாளை 343 சேவை மட்டுமே இயக்கப்படவுள்ளது. அதே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 10ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அதற்கான சான்றை டிக்கெட் கவுன்டர்களில் காண்பித்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசில் செத்துக்கிடந்த பல்லி… வாங்கிய கையோடு வாந்தி எடுத்த பயனாளி!

2. ஏற்கனவே சீசன் டிக்கெட் எடுத்தவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை உடன் வைத்திருக்க வேண்டும்.

3. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக UTS Mobile App மூலம் பயணச்சீட்டு பெற முடியாது.

4. ரயில் பயணத்தின் போது ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்; முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி