ஆப்நகரம்

தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு; சென்னை பயணிகள் ஹேப்பி!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு ஒட்டுமொத்த பயணிகளையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது.

Samayam Tamil 28 Jan 2022, 10:03 pm
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil சென்னை புறநகர் ரயில்
சென்னை புறநகர் ரயில்



அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது.

ஆடிப்போய் கிடக்கும் அதிமுக; பீதி கிளப்பிய டெல்லி உத்தரவு!

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த இரவு நேர ஊரடங்கு கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கையும் தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

நீட் தேர்வு... திரும்பி பார்க்க செய்த அரசு பள்ளி மாணவன்!

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

அதை காண்பித்தால் மட்டுமே சீசன் டிக்கெட், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு டிக்கெட் வழங்கப்படும் என அதிரடி கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே விதித்து இருந்தது.

பாஜக அண்ணாமலை டபுள் கேம்; வெளிச்சம் போட்ட அதிமுக!

தற்போது தமிழகத்தில் கொரோனா கட்டப்பாடுகள் நீக்கப்பட்டு இருப்பதால் தெற்கு ரயில்வேவும் தனது கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1ம் தேதி முதல், நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி