ஆப்நகரம்

ஒருதலைக் காதலால் பெண்ணை எரித்து கொன்ற சம்பவத்தில் தாயும் மரணம்!

சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற நபர் ஒருதலைக் காதலால் இந்துஜா என்ற பெண்ணைப் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தின்போது பெண்ணைக் காப்பாற்றச் சென்ற தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

TNN 29 Nov 2017, 10:52 am
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற நபர் ஒருதலைக் காதலால் இந்துஜா என்ற பெண்ணைப் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தின்போது பெண்ணைக் காப்பாற்றச் சென்ற தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil stalker who burnt a girl alive has been charged with double murder case
ஒருதலைக் காதலால் பெண்ணை எரித்து கொன்ற சம்பவத்தில் தாயும் மரணம்!


சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், அருகிலிருந்த இந்துஜா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரின் தாய் ரேணுகா மற்றும் தங்கை நிவேதா ஆகிய இருவருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரது தாய் ரேணுகா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ஆகாஷ் மீது இரட்டைக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி