ஆப்நகரம்

தூத்துக்குடி சம்பவம் எதிரொலி: மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 May 2018, 4:10 pm
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil 29977698-b47e-4b3f-af78-8eabdb7d8019.
மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரழந்துள்ளனர். தொடரும் இந்த சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். மெரீனாவில் போராட்டக்காரர்கள் ஊடுருவாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது.

மெரீனாவில் பாதுகாப்பு பணியில் போலீஸார்


தற்போது தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தூத்துக்குடி மாவடத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், அதற்கு காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார். தமிழகம் கேட்டுக்கொண்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் என மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி