ஆப்நகரம்

Chennai Electric Trains: இனி நேரம் தடையில்லை... மாணவர்களுக்கு அனுமதி

மாணவர்கள் இனி எல்லா நேரமும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Feb 2021, 8:10 am
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்ததையடுத்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
Samayam Tamil electric trains


எனினும் சுகாதாரப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் பெண்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த அனுமதியும் , குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய வழங்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் 6, 7, 8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு; வெளியான முக்கியத் தகவல்!

தற்போது 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ஆம் தேதி முதல் சென்னை மின்சார ரெயில்களில் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி