ஆப்நகரம்

வெள்ள அபாயத்தில் வடசென்னை... ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சதுப்பு நிலங்கள் ஆக்கிமிரப்பால் வடசென்னை பகுதிக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்தி தகவல் தெரிவித்துள்ளது

Samayam Tamil 20 Nov 2020, 7:50 pm
சதுப்பு நிலப்பகுதிகளை மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்களே ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்துள்ளதால், வடசென்னை பகுதிகளுக்கு மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தன்னார்வ அமைப்பின ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்பு படம்
சென்னையில் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு


2015 இல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், எண்ணூர்- பழவேற்காடு சதுப்பு நிலத்தில் 667 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளன என்று எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரம் இயக்கத்தின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் சென்னைக்கு வரவுள்ளார். இந்த நிலையில், எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரம் இயக்கத்தின் சார்பில் அதிர்ச்சிகரமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:

மழை விட்டிடுச்சு... சென்னை ஏரிகளின் தற்போதைய நிலவரம் என்ன? -வாங்க பார்ப்போம்!

காமராஜர் துறைமுகம், NTECLயின் வள்ளூர் மின் நிலையம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், 2015 ஆம் ஆண்டுக்கு வெள்ளத்திற்குப் பிறகு 417 ஏக்கர் நிலத்தைத் தொழிற்சாலைகளுக்கான நிலமாக மாற்றம் செய்துள்ளன.

பிளாஸ்டிக் தொழில்பேட்டையான TIDCOவின் பாலி பார்க் மீதமுள்ள 239 ஏக்கர் மற்றும் எண்ணூர் SEZ-இன் அனல் மின் நிலையம் 11 ஏக்கர் அலை பரவும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

கொசத்தலை ஆற்றின் சதுப்பு நிலப்பகுதிகளை பொதுத்துறை நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதன் மூலமாக இப்பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை அபாயத்துக்குள்ளாகியிருக்கிறது.

சென்னையில் இறங்குமுகம் காட்டும் கொரோனா!

ஆக்கிரமிப்புகளின் காரணமாக பொன்னேரி, மாதவரம், ஆர்கே நகர், திருவொற்றியூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாழும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேரழிவு ஏற்படுத்தும் வெள்ளத்தின் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

சாகர் மாலா, பாரத் மாலா அவற்றுடன், மேக் இன் இந்தியா திட்டமும் சேர்ந்து எண்ணூர்-பழவேற்காடு சதுப்பு நிலப்பகுதிகளை அழித்து மீனவ மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கின்றன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து... இதுதான் காரணமாம்!

இந்திய அரசாங்கம் தொலைக்குப்பார்வை உள்ளதாக இருக்க வேண்டும். சதுப்பு நிலங்கள், குறிப்பாக அலையேற்றம் பெறும் உவர் சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டால், அதன் காரணமாக வெள்ள அபாயம் தடுக்கப்படும்.

உப்பு நீர் நிலப்பகுதிக்குள் ஊடுருவுவது, கடல்மட்ட உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பு அரணாக அவை செயல்பட்டு, இப்பகுதிகளை பாதுகாக்கும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி