ஆப்நகரம்

Chennai Weather: சென்னையில் மழை: கருமேகங்கள் திரண்டதால் இருளான நகரம்!

சென்னையில் இன்று திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால், கருமேகங்கள் திரண்டு நகரே இருளாக காட்சியளித்தது.

Samayam Tamil 20 Nov 2018, 5:55 pm
கஜா புயலைப் போல தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னையில் பெரும்பாலான இடங்களில்பரவலாக மழை பெய்து வருகிறது.
Samayam Tamil சென்னையில் திடீரென வானிலை மாற்றம்: கருமேகங்கள் திரண்டதால் இருளான நகரம்!
சென்னையில் திடீரென வானிலை மாற்றம்: கருமேகங்கள் திரண்டதால் இருளான நகரம்!


வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த வாரம், நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே கரையை கடந்த நிலையில், சென்னைக்கு மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் வானம் ஒருவித மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தது. ஆனால் மழை மட்டும் வரவில்லை.

இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று மதியம் திடீரென கருமேகங்கள் திரண்டு, வானம் இருண்டதால் நகரே இருள்சூழ்ந்து காட்சியளித்தது. பின்னர் பலத்த குளிர்காற்றுடன் சிறிதுநேரம் மழை பெய்தது.

இதனிடையே, சென்னையில் இன்றிரவு முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், வழக்கமாக வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சென்னைக்கு 850 மி.மீ. மழை பெய்யும். இந்த நாள் வரை வெறும் 225 மி.மீ. மழைதான் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 3 நாட்கள் சென்னைக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். ஒருவேளை இந்த மழையை சென்னை இழக்குமானால், நிச்சயம் அதிக சிரமத்துக்குள்ளாகும்.

அதே சமயம் இந்த ஒரு மழையால் மட்டும் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை நிரப்பிவிட முடியாது. இதற்குப் பிறகு மேலும் இதுபோன்றதொரு மழை சென்னைக்குத் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி