ஆப்நகரம்

அக்டோபர் ஆன ஏப்ரல்.... குளுகுளு கிளைமேட்டால் சென்னைவாசிகள் வெரி ஹேப்பி!

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சென்னை மாநகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 15 Apr 2021, 9:57 am

ஹைலைட்ஸ்:

  • சென்னையில் அதிகாலையில் கோடை மழை கொட்டித் தீர்த்தது.
  • நகரில் குளிர்ந்த வானிலை நிலவுவதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சி.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோடைமழை சென்னை
சென்னையில் கொட்டித் தீர்த்த கோடை மழை
சென்னை மாநகரில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வடமாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
அந்த கணிப்பின்படியே, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை கொட்டித் தீர்த்தது.

தி.நகர், சைதாப்பேட்டை, வடபழநி, அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.

மக்களே உஷார்... ரேஷன் கடைகள் மூலம் கொரோனா பரவும் அபாயம்!

இதன் பயனாக மாநகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. கோடை வெப்பம் வறுத்தெடுக்கும் ஏப்ரல் மாதத்தில், பருவமழை காலமான அக்டோபர் மாதத்தை போன்ற வானிலை நிலவுவதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி