சென்னை மாநகரில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வடமாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அந்த கணிப்பின்படியே, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை கொட்டித் தீர்த்தது.
தி.நகர், சைதாப்பேட்டை, வடபழநி, அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
மக்களே உஷார்... ரேஷன் கடைகள் மூலம் கொரோனா பரவும் அபாயம்!
இதன் பயனாக மாநகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. கோடை வெப்பம் வறுத்தெடுக்கும் ஏப்ரல் மாதத்தில், பருவமழை காலமான அக்டோபர் மாதத்தை போன்ற வானிலை நிலவுவதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர்.
தி.நகர், சைதாப்பேட்டை, வடபழநி, அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
மக்களே உஷார்... ரேஷன் கடைகள் மூலம் கொரோனா பரவும் அபாயம்!
இதன் பயனாக மாநகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. கோடை வெப்பம் வறுத்தெடுக்கும் ஏப்ரல் மாதத்தில், பருவமழை காலமான அக்டோபர் மாதத்தை போன்ற வானிலை நிலவுவதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர்.