ஆப்நகரம்

உலகிலேயே தமிழ்தான் தொன்மையான மொழி: ராம்நாத் கோவிந்த்

உலகிலேயே தமிழ்தான் தொன்மையான மொழி என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Samayam Tamil 5 May 2018, 8:25 pm
உலகிலேயே தமிழ்தான் தொன்மையான மொழி என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
Samayam Tamil viewimage


சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், “மாணவர்களின் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி உள்ளது. பட்டம் பெறும் மாணவர்கள், தங்களது படிப்பை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

உலகிலேயே தமிழ்மொழி தான் தொன்மையான மொழி என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் நாட்டின் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குரியது என்றும் பேசினார்.

பின், சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் 42வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொண்டார். அங்கு கல்லூரி கலையரங்கத்தையும் திறந்து வைத்தார்.

அடுத்த செய்தி