தமிழகத்தில் ஏற்கனவே ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அடுத்ததாக நகர்ப்புற பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். அதன்பிறகு வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் செம பிஸியாக மாறிவிடுவர். தற்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் திமுகவின் கோட்டையாக இருக்கும் சென்னையின் மீது கவனம் குவியத் தொடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சென்னை மாநகராட்சி முதல் பெண் (தாழ்த்தப்பட்டோர்) மேயரை காணப் போகிறது.
இது வரலாற்றில் சிறப்பு வாய்ந்த தருணம். எனவே அந்த பெண் மேயர் யாராக இருப்பார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றி தன்வசம் வைத்திருக்கிறது திமுக கூட்டணி. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிக் அடிக்கப் போகும் பெண் தான் சென்னையின் புதிய மேயர் என்பதில் சந்தேகமில்லை. எனவே சென்னையில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக வலம் வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களை நிறுத்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது.
இருவருமே முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வருகின்றனர். இதனால் தங்களுடைய நம்பிக்கைக்குரிய நபர்களின் பட்டியலை இருவரும் தனித்தனியே முதல்வரிடம் அளித்தாக சொல்லப்பட்டது. அதில் யாரை இறுதி செய்யப் போகிறார் என்பது தான் கட்சிக்குள் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசல் புரசலாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, சென்னை மேயராக வரக்கூடியவர் எப்படி இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு இலக்கு வைத்திருக்கிறாராம். படித்தவராக, சமூகத்தில் நற்பெயர் பெற்றவராக, இரவு பகல் பாராமல் உழைக்கும் நபராக இருக்க வேண்டும் என்று வரையறை வகுத்துள்ளார். இதற்குள் அடங்கிய இருவரை ஸ்டாலின் இறுதி செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருவர் எப்போதும் பொதுநல சேவையில் அதிக ஈடுபாடு காட்டி வருபவராம். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகளாம். எனவே இவர்களில் ஒருவருக்கு தான் சென்னை மேயராக அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இருப்பினும் விஷயம் தெரியாமலா போய்விடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும். அதுவரை காத்திருங்கள் என்று கூறி கழக உடன்பிறப்புகள் மழுப்பிவிட்டனர்.
இது வரலாற்றில் சிறப்பு வாய்ந்த தருணம். எனவே அந்த பெண் மேயர் யாராக இருப்பார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றி தன்வசம் வைத்திருக்கிறது திமுக கூட்டணி. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிக் அடிக்கப் போகும் பெண் தான் சென்னையின் புதிய மேயர் என்பதில் சந்தேகமில்லை. எனவே சென்னையில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக வலம் வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களை நிறுத்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது.
இருவருமே முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வருகின்றனர். இதனால் தங்களுடைய நம்பிக்கைக்குரிய நபர்களின் பட்டியலை இருவரும் தனித்தனியே முதல்வரிடம் அளித்தாக சொல்லப்பட்டது. அதில் யாரை இறுதி செய்யப் போகிறார் என்பது தான் கட்சிக்குள் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசல் புரசலாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, சென்னை மேயராக வரக்கூடியவர் எப்படி இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு இலக்கு வைத்திருக்கிறாராம். படித்தவராக, சமூகத்தில் நற்பெயர் பெற்றவராக, இரவு பகல் பாராமல் உழைக்கும் நபராக இருக்க வேண்டும் என்று வரையறை வகுத்துள்ளார். இதற்குள் அடங்கிய இருவரை ஸ்டாலின் இறுதி செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருவர் எப்போதும் பொதுநல சேவையில் அதிக ஈடுபாடு காட்டி வருபவராம். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகளாம். எனவே இவர்களில் ஒருவருக்கு தான் சென்னை மேயராக அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இருப்பினும் விஷயம் தெரியாமலா போய்விடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும். அதுவரை காத்திருங்கள் என்று கூறி கழக உடன்பிறப்புகள் மழுப்பிவிட்டனர்.