ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்!!!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 28 Oct 2018, 6:13 pm
சென்னை விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்!!!
சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்!!!


சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து,சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது, இரண்டு வெவ்வேறு விமானங்களில் சென்னை வந்த இரண்டு நபர்கள், தாங்கள் வைத்திருந்த மைக்ரோவேவ் அவன்,எலக்ட்ரிக் தட்டு ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மொத்த எடை 6.995 கிலோ இருக்கலாம் எனவும், மதிப்பு ரூ.2.28 கோடி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர், அவர்கள் இருவரையும் நேபாளம் அழைத்துச் சென்றதாகவும், மலேசியாவிலிருந்து நேபாளத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தை அவர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு கடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி